BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 1 November 2014

அகில இந்திய வானொலியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் உரை


பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ மனதின் குரல் என்ற பெயரில் இன்று ஞாயிற்றுக்கிழமை வானொலியில் உரையாற்றுகிறார். இன்று காலை 11 மணிக்கு அனைத்து வானொலி நிலையங்களிலும் பிரதமரின் உரை ஒலிபரப்பாகிறது. இதன் தமிழாக்கம் இரவு 8 மணிக்கு தமிழகத்தில் உள்ள அகில இந்ந்திய வானொலியின் அனைத்து நிலையங்களிலும் ஒலிபரப்பாகும்.
முன்னதாக கடந்த அக்டோபர் 3–ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக வானொலியில் உரையாடினார். அப்போது அவர் மக்கள் கதர் அணிவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டு மக்கள் அனைவரையும் வானொலி வழியாக தொடர்பு கொள்வதாகவும் தன் மனதின் வார்த்தைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று நவம்பர் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பிரதமர் வானொலியில் உரையாற்றுகிறார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies