BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 16 October 2014

விடுதலைப்புலிகள் மீதான தடை ரத்து: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு


விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய யூனியன் விதித்த தடை வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது. தடையை ரத்து செய்து, லக்ஸம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது."பத்திரிகை செய்திகளையும், இணையதளத்தில் வெளிவந்த செய்திகளையும் அடிப்படையாக வைத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்திய அதிகாரிகள் தரப்பில் தரப்பட்ட தகவல்களை நம்பகமானவையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஒருதலைபட்சமான அணுகுமுறையை அவர்கள் கொண்டிருந்தனர்' என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
எனினும், "விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தேவைப்பட்டால் இரண்டு மாதங்களுக்குள் ஐரோப்பிய யூனியன் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.தற்போதைக்கு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கம் நீக்கப்படாது. அந்த இயக்கத்துக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய யூனியன் சேர்த்தது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies