நேற்று ஹாக்கி ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணி , இன்று கபடிப் போட்டிகளில் இறுதிப் போட்டியில் விளையாடியது .
இந்திய மகளிர் அணி ஈரான் அணியை எதிர்த்து விளையாடியது . தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முதல் பாதியில் 15 - 11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது . பின்னர் இதே முன்னிலையை தக்க வைத்துக் கொண்ட இந்திய அணி 31 - 21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது . இது ஆசியப் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெல்லும் இரண்டாவது தங்கம் .
இதேப் போன்று இந்திய ஆடவர் அணி ஈரானை எதிர்த்து விளையாடியது . முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஈரான் இந்தியாவை 13 - 21 என்று முன்னிலை பெற்றது . பின்னர் துடிப்பாக ஆடிய இந்திய அணி 25 - 24 என்று வெற்றி பெற்றது . இதன் மூலம் கபடிப் போட்டியை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைத்த 1990 ஆம் ஆண்டில் இருந்து , இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .