BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 5 October 2014

பால் தாக்கரேவுக்காக சிவசேனாவை விமர்சிக்க மாட்டேன் - மோடி

பாஜக வின் நீண்ட நாள் கூட்டாளியான சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி முறிந்து மகாராஷ்டிராவில் தற்போது இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன, மராட்டிய மாநிலத்தில் பால்தாக்ரே கட்சிகளை கடந்த தனிப்பெரும் தலைவராக விளங்குகிறார், அவர் இறந்து போனாலும் அவர் மீதான விமர்சனத்தை மராட்டியர்களால் தாங்க முடியாது.

இன்று பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார், சாங்லி மாவட்டத்தின் டாஸ்கான் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது,  சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே காலமான பின்பு மகாராஷ்டிரத்தில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிவசேனாவை விமர்சித்து ஒரு வார்த்தைக் கூட பேசக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். இது, அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகவே கருதுகிறேன் என்றார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies