BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 18 October 2014

ஐ.எஸ்.ஸூக்கு எதிரான நடவடிக்கைகள் : ஒபாமா ஆய்வு



இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அதிபர் ஒபாமா நடத்திய சந்திப்பின்போது, இராக்கிலும், சிரியாவிலும் தற்போது நிலவும் அரசியல் சூழல்கள் குறித்து கேட்டறிந்தார்.

இராக்கிய வீர்ரகளுக்கு போர்ப் பயிற்சி, ஆலோசனை, ஆயுதங்கள் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர் விவாதித்தார். மேலும், அந்த நாடுகளில் ஐ.எஸ்.ஸூக்கு எதிரான நடவடிக்கைகளின் தாக்கம் குறித்தும் அவர் ஆலோசித்தார்.துணை அதிபர் ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூஸன் ரைஸ் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies