BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 8 October 2014

பேஸ்புக்கில் சாதனை படைக்க போகிறார் கால்பந்து வீரர் ரொனால்டோ

கால்பந்தில் இப்போதைக்கு இருப்பவர்களில் சிறந்த வீரர்கள் என யாரிடமாவது கேட்டால் அவர்கள் கூறும் பதில் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரோனால்டோவும், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியும் தான் இருப்பார்கள். அவர்களில் யார் சிறந்த வீரர் என பார்த்தால் பெரிய சண்டையே வரும். ரோனால்டோ இப்போது மெஸ்ஸியை விட சிறந்தவன் என்பதை நிருபிக்க பேஸ்புக்கில் புதிய சாதனை செய்ய உள்ளார்.



பேஸ்புக்கில் உள்ள நபர்களின் பக்கங்களுக்கு அதிக லைக் வந்ததில் முதல் இடத்தில் இருப்பவர் ஷகிரா. இவரது பக்கத்துக்கு 104 மில்லியன் லைக்குகள் வந்துள்ளது. பேஸ்புக்கில் முதன் முதலாக 100 மில்லியன் லைக்குகளை பெற்றது இவர் தான். இந்த சாதனையை ரொனால்டோ அடுத்து செய்ய உள்ளார். விரைவில் அவர் 100 மில்லியன் லைக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பக்கத்துக்கு இப்போதைக்கு 99.5 மில்லியன் லைக்குகள் உள்ளன. இவரது போட்டியாளரான மெஸ்ஸியின் பக்கத்துக்கு 73 மில்லியன் லைக்குகள் உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies