தலைப்பை பார்த்ததும் புல் பெட்ரோலா? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நினைக்கத் தோன்றும். இது கதை அல்ல. அறிவியல் நிஜம். காடுகளிலும், தோட்டங்களிலும் வளரும் புற்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். பூமிக்கு அடியில் இருந்து இயற்கையாக கிடைக்கும் கச்சா எண்ணையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் பிரித்து எடுக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் அதிக அளவில் கிடைக்கும் இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களால் சுற்றுப்புற சூழல், காற்று போன்றவை மாசுபடும் நிலையும் உள்ளது. மேலும் அவற்றின் உற்பத்தியும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் மாற்று எரிபொருள் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மூலிகையில் இருந்து பெட்ரோல் போன்ற எரிபொருள் தயாரிக்கலாம் என்று நம்ம ஊர் ராமர் பிள்ளை சொன்னார். காட்டாமணுக்கு விதையில் இருந்து இயற்கை டீசல் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை டீசலை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டும் முயற்சியும் ஆங்காங்கே நடந்து வருகிறது.மேலை நாடுகளில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக ஹைட்ரஜன் மற்றும் பேட்டரியில் இயங்க கூடிய வாகனங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் புற்களில் இருந்து இயற்கை எரிபொருள் மற்றும் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நிரூபித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக இருப்பவர் டேவிட் டில்மன். இவரும் இவரது குழுவினரும் சேர்ந்து இயற்கை எரிபொருள் உருவாக்கும் முயற்சியில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
புல் தோட்டம் :
மூலிகையில் இருந்து பெட்ரோல் போன்ற எரிபொருள் தயாரிக்கலாம் என்று நம்ம ஊர் ராமர் பிள்ளை சொன்னார். காட்டாமணுக்கு விதையில் இருந்து இயற்கை டீசல் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை டீசலை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டும் முயற்சியும் ஆங்காங்கே நடந்து வருகிறது.மேலை நாடுகளில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக ஹைட்ரஜன் மற்றும் பேட்டரியில் இயங்க கூடிய வாகனங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் புற்களில் இருந்து இயற்கை எரிபொருள் மற்றும் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நிரூபித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக இருப்பவர் டேவிட் டில்மன். இவரும் இவரது குழுவினரும் சேர்ந்து இயற்கை எரிபொருள் உருவாக்கும் முயற்சியில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
புல் தோட்டம் :
ஏற்கனவே சோயா மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றில் இருந்து இயற்கை எரிபொருள் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அது போல் வேறு தாவரங்களில் இருந்து எரிபொருளை இயற்கையாக தயாரிக்க முடியுமா? என்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது தரிசு நிலங்களிலும், காட்டுப்பகுதிகளிலும் விளையும் புற்களில் இருந்து மின்சாரமும், இயற்கை எரிபொருளும் தயாரிக்க முடியும் என்பதை கண்டுபிடித்தனர்.
இந்த இயற்கை எரிபொருள் தயாரிப்புக்காக இவர்கள் பயன்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பத்துக்கு கார்பன் நெகடிவ் என்பது பெயராகும். அதாவது சுற்றுப்புறத்தில் இருந்து உள்இழுக்கப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவை விட, வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைவாக இருக்கும். இந்த ஆய்வுக்காக 16 வகையான புல் இனங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இந்திய ரக புல்களும் உண்டு. இந்த புற்கள் தங்களது இலை, தண்டு மற்றும் வேர் பகுதியில் அதிக அளவிலான கார்பன் டை ஆக்சைடை சேமித்து வைக்கும் திறன் கொண்டது. இதனால் சுற்றுப்புற சூழுலில் இருந்து உறிஞ்சப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த புற்களில் இருந்து மின்சாரம் மற்றும் இயற்கை எரிபொருள் தயாரிக்கப்படும் போது வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைவாகவே இருக்கும். அதாவது எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்பட்டதோ அதை விட குறைவான அளவே வெளியாகும். தற்போது சோதனை சாலை அளவில் நடைபெற்ற இந்த ஆய்வுகள் வெற்றியைத்தந்துள்ளன. இவை முழு அளவில் பயன்படுத்தப்படும் போது பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு கணிசமாக குறையும், சுற்றுப்புற சூழல் மாசுபடுவதும் பாதுகாக்கப்படும்.