அதிமுக தலைவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பார்ப்பன அஹ்ராஹார சிறையில் இருக்கிறார் . இவருக்கு 4 ஆண்டுகள் சிறையும் , 100 கோடி ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது . இவருக்கு ஜாமீன் உடனடியாக கிடைக்கவில்லை . இவரின் ஜாமீன் மனு அக்டோபர் 7 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது .
கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது . அதற்கு பல துறைகளும் ஆதர்வாக போராட்டம் நடத்தினர் . இப்போது கேபிள் சங்கங்களும் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர் . இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்படும் என அறிவித்துள்ளனர் .
ஏற்கனவே திரையுலகினர் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .