BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 14 October 2014

களைகட்டியது ஈரோடு ஜவுளிச்சந்தை



தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ஈரோடு ஜவுளிச் சந்தையில் தினமும் ரூ.5 கோடிக்கு வர்த்தம் நடைபெறுகிறது.நூறு ஆண்டுகள் பழமையான ஈரோடு ஜவுளிச்சந்தை கனி மார்க்கெட், அசோகபுரம், திருவேங்கடசாமி வீதி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வருகின்றன. கனி மார்க்கெட்டில் தினமும் ஜவுளிச்சந்தை நடக்கிறது. பிற இடங்களில் செவ்வாய்க்கிழமைதோறும் ஜவுளிச்சந்தை நடைபெறும். கனிமார்க்கெட்டில் தினமும் 330 கடைகள் இயங்கி வருகின்றன. இது தவிர ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய், புதன்கிழமை வரை நடக்கும் வாரச் சந்தையில் 730 கடைகள் இடம்பெறும். இந்த மூன்று நாள்களிலும் 1,060 கடைகள் இயங்குவதால், விற்பனை அதிகளவில் இருக்கும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஜவுளி ரகங்கள் அடுத்தடுத்த கடைகளில் கிடைப்பதாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீபாவளி ஜவுளி கொள்முதலுக்காக பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். இதனால், ஜவுளி விற்பனை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 இதுகுறித்து கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் கூறியது:வழக்கமாக சந்தை நாள்களில் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை நடக்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தீபாவளி ஜவுளி கொள்முதலுக்காக பொதுமக்கள் அதிகம் வருகின்றனர். இதனால், தினமும் ரூ.5 கோடிக்கு விற்பனை நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஜவுளிகளின் விலையில் பெரிய மாற்றம் இல்லாததும், மழை இல்லாததும் விற்பனை அதிகரிக்கக் காரணமாக உள்ளது. தீபாவளிக்குள் ரூ.60 கோடிக்கு விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies