அடுத்த 5 வருடத்திற்குள் இந்தியாவை சுத்தப்படுத்த " சுத்தமான இந்தியா " திட்டத்தை நேற்று மோடி துவங்கி வைத்தார் . காந்தியின் பிறந்த நாளான நேற்று அவரின் கனவான சுத்தமான இந்தியாவை நிறைவேற்ற மோடி தன்னுடைய முதல் படியை எடுத்து வைத்துள்ளார் . இதனை தொடங்கும் விதமாக மோடி அவர்கள் கையில் துடைப்பத்துடன் சுத்தம் செய்து தொடங்கி வைத்தார் .
அது மட்டுமில்லாமல் மோடி இதற்காக இந்தியாவில் 9 நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த 9 நபர்கள் யார் என்று பார்ப்போம்.
* ஆமீர் கான்
* அனில் அம்பானி
* பாபா ராம்தேவ்
* கமல்ஹாசன்
* மிருதுளா சின்ஹா
* பிரியங்கா சோப்ரா
* சச்சின் டெண்டுல்கர்
* சல்மான் கான்
* சசி தரூர்