BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 18 October 2014

வறுமைக் கோட்டுக்கு கீழே 120 கோடி மக்கள்



உலகம் முழுவதும், 120 கோடி பேர் நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் (ரூ.77) குறைவாக வருவாய் ஈட்டுவதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் 1.25 டாலருக்கும் குறைவான வருவாய் உடையவர்கள் 120 கோடி பேர் உள்ளனர். 2 டாலருக்கும் (ரூ.123) குறைவாக 240 கோடி பேர் வருவாய் ஈட்டுகின்றனர்.கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆண் ஆண்டு வரை 70 கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளனர்.2008-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி தொடங்கிய பிறகு, ஏழை-பணக்காரர்களிடையேயான ஏற்றத்தாழ்வு எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிகமாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளன என்றார் அவர்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies