பிரதமர் நரேந்திர மோடி வரும் 29 மற்றும் 30 தேதிகளில் அமெரிகாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க உள்ளதாகவும் இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பொருளாதார வளர்ச்சி, மற்றும் உலகலாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும், கூட்டாக செவ்வாய் கிரக(mars) ஆராய்ச்சியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து நாசாவின் கோள்கள் அறிவியல் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் ஜேம்ஸ் கிரீன் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதில் இந்தியாவின் கூட்டாக செவ்வாய் கிரக(mars) ஆராய்ச்சி விண்வெளி ஆராய்ச்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து நாசா ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். மேலும் இருதரப்பிலும் செவ்வாய் கிரகம் தொடர்பான (மார்ஸ்) அறிவியல் ஆராய்ச்சி தகவல்களை (Mars Orbiter Mission) பகிர்ந்து கொள்வது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்தார்.