BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 12 August 2014

செல்பி எடுக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட ஒரு ஜோடி




உலகமே இப்போது செல்பிக்கு மாறி வருகிறது. எங்கு பார்த்தாலும் ஒரே செல்பி மோகம் தான். உலகி உள்ள போட்டோகிராபர்களுக்கு எல்லாம் வேலை இல்லாத நிலைக்கு சென்று விடுவார்கள் போல. இதன் உச்சக்கட்ட சம்பவம் ஒன்று போர்ச்சுகலில் நடந்து உள்ளது. போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள பிரபல சுற்றுலா தலமான லிஸ்பன் அருகேயுள்ளது கபோ டே ரோகா. இங்கு மலை குன்றை ஒட்டி, அட்லான்டிக் கடல் அமைந்துள்ளது.

இந்த பகுதிக்கு தங்களது ஐந்து மற்றும் ஆறு வயது குழந்தைகளுடன் போர்ச்சுக்கல் தம்பதி ஒன்று வந்துள்ளது. குழந்தைகளை ஓரமாக நிற்க செய்துவிட்டு மலை குன்றின் உச்சியில் நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளது அந்த தம்பதி. பின்பக்கம் இருந்த கடலும் சேர்ந்து படத்தில் விழ வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சிபகுதிக்கே வந்த அந்த கணவனும், மனைவியும், குழந்தைகள் கண் எதிரிலேயே கடலில் விழுந்தனர். அவர்களது சடலங்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies