BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 11 August 2014

ஏ.டி.எம்.மில் இருந்து பணத்துக்கு பதில் பாம்பு வந்தது, அதிர்ச்சியடைந்த பெண்




கலிபோர்னியாவை சேர்ந்த ஜுலியட் மெட்னாட் என்னும் பெண் ஏ.டி.எம். நிலையத்துக்கு சென்று கார்ட்டை ஸ்வைப் செய்து விட்டு பணம் வரும் என்று காத்துக்கொண்டு இருந்தார். ஆனால் பணம் வெளியே வருவதற்கு முன் அங்கிருந்த பாம்பு ஒன்று வெளியே வந்து எட்டிப்பார்த்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சியுற்றார்.  உடனடியாக வெளியே வந்து காவலர்களிடம் புகார் தெரிவித்தார். காவலர் உள்ளே சென்று பார்த்தபோது மிஷினை சுற்றி பாம்பு ஊர்ந்து கொண்டிருந்ததை பார்த்தார்.

உடனடியாக தனது மேலதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். வன விலங்கு அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பாம்பை அகற்றினர். அந்த ஏ.டி.எம். மிஷின் செண்டரில் எலிகள் நடமாடுவதாகவும், அதை பிடிக்கவே அந்த பாம்பு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மெஷினுக்குள் பாம்பு சென்றதால் சில தொழிற்நுட்ப கோளாறுகள் நடந்து உள்ளன. எனவே அந்த ஏ.டி.எம். தற்போது தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.


snake came in atm instead of cash, so that the woman got shocked.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies