6,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு
உலகில் மனித இனம் எப்போது தோன்றியது? என்பது குறித்த ஆய்வுகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வுகளின் போது மிகவும் பழமையான மனித எலும்புக்கூடுகள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சுமார் 6 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த மனிதனின் எலும்புக்கூடு ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்பொருள் அருங்காட்சியகம் ஒன்று பிலடெல்பியாவில் உள்ளது. இந்த அருங்காட்சியக தொல்பொருள் அதிகாரிகள், தங்கள் அருங்காட்சியகத்தின் அடித்தள பகுதியிலேயே ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுமார் 6 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அதாவது கி.மு. 4500-ம் ஆண்டுகளில் வாழ்ந்து வந்த மனிதனின் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் அரிய கண்டுபிடிப்பான இந்த எலும்புக்கூடு, 85 ஆண்டுகளாக அங்கே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் துரதிர்ஷ்டவசமாக அந்த எலும்புக்கூடு தொடர்பான ஆவணங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
******
புகையிலையில் இருந்து விமான எரிபொருள்
விமானங்களில் தற்போது பயன்படுத்தும் எரி பொருட்களால் கார்பன் உமிழ்வு ஏற்பட்டு அதன் மூலம் காற்று மாசுபடுகிறது.
இதை தடுப்பதற்காக புகையிலையில் இருந்து விமான எரிபொருள் தயாரிப்பதற்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தென் ஆப்பிரிக்க விமான நிறுவனத்துடன் இணைந்து போயிங் நிறுவனம் செயல்படுத்துகிறது.
அதன்படி ‘சொலாரிஸ்’ எனப்படும் ஒருவகை கலப்பு ரக புகையிலையில் இருந்து, இந்த எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை புகையிலையில் ‘நிக்கோட்டின்’ எனப்படும் நச்சுப்பொருள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களுக்கு மாற்று எரிபொருளாக கருதப்படும் இந்த புகையிலை எரிபொருள், அடுத்த சில ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என தென் ஆப்பிரிக்க விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் மனித இனம் எப்போது தோன்றியது? என்பது குறித்த ஆய்வுகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வுகளின் போது மிகவும் பழமையான மனித எலும்புக்கூடுகள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சுமார் 6 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த மனிதனின் எலும்புக்கூடு ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்பொருள் அருங்காட்சியகம் ஒன்று பிலடெல்பியாவில் உள்ளது. இந்த அருங்காட்சியக தொல்பொருள் அதிகாரிகள், தங்கள் அருங்காட்சியகத்தின் அடித்தள பகுதியிலேயே ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுமார் 6 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அதாவது கி.மு. 4500-ம் ஆண்டுகளில் வாழ்ந்து வந்த மனிதனின் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் அரிய கண்டுபிடிப்பான இந்த எலும்புக்கூடு, 85 ஆண்டுகளாக அங்கே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் துரதிர்ஷ்டவசமாக அந்த எலும்புக்கூடு தொடர்பான ஆவணங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
******
புகையிலையில் இருந்து விமான எரிபொருள்
விமானங்களில் தற்போது பயன்படுத்தும் எரி பொருட்களால் கார்பன் உமிழ்வு ஏற்பட்டு அதன் மூலம் காற்று மாசுபடுகிறது.
இதை தடுப்பதற்காக புகையிலையில் இருந்து விமான எரிபொருள் தயாரிப்பதற்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தென் ஆப்பிரிக்க விமான நிறுவனத்துடன் இணைந்து போயிங் நிறுவனம் செயல்படுத்துகிறது.
அதன்படி ‘சொலாரிஸ்’ எனப்படும் ஒருவகை கலப்பு ரக புகையிலையில் இருந்து, இந்த எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை புகையிலையில் ‘நிக்கோட்டின்’ எனப்படும் நச்சுப்பொருள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களுக்கு மாற்று எரிபொருளாக கருதப்படும் இந்த புகையிலை எரிபொருள், அடுத்த சில ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என தென் ஆப்பிரிக்க விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.