BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 3 August 2014

இலங்கை விமான நிறுவனம் மீது திருச்சியில் தாக்குதல்..!

தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பணியகம் நேற்றிரவு தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்தின் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் கண்ணாடிகள் நொருங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் கேவலப்படுத்தும் வகையில், வெளியான கட்டுரை மற்றும், ஒளிப்படம் தொடர்பாக தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதையடுத்து, திருச்சியிலுள்ள சிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு மேலதிக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.எனினும், நேற்றிரவு, ஒரு குழுவினர் திடீரென சிறிலங்கன் விமான நிறுவனத்தின் மீது கற்களை வீசித் தாக்கினர்.இதில், நிறுவனத்தின் முன்பக்க கண்ணாடிகள் நொருங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies