ஆக்ஸிஜன் எனப்படும் மொபைல் வழி பேமண்ட்களை செய்திடும் அப்ளிகேஷன் மூலம் இனி சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பணத்தினை அனுப்பலாம் . இந்த வசதியை கடந்த புதங்கிழமை வெளியிட்ட அப்டேட் மூலம் கொண்டு வந்துள்ளனர் .
இந்த அப்ளிகேஷன் மூலம் 5,000 ரூபாய் வரை பரிவர்தனை செய்யலாம் . இதன் மூலம் மொபைல் ரிசார்ஜ் , பில் கட்டும் வசதி , ஆன்லைனில் ஷாப்பிங் போன்றவற்றை செய்து கொள்ளலாம் . இனிமேல் பேஸ்புக் , கூகுள் + , வாட்ஸ்அப் , டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கு இல்லாமல் பணத்தை அனுப்பலாம் .
இதில் இன்னொரு சிறப்பு வசதி என்னவென்றால் , இந்த ஆக்ஸிஜiன் அப்ளிகேஷன் இல்லாதவர்களுக்கும் நீங்கள் பணத்தை அனுப்பலாம் .