BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 6 August 2014

சியோமி மொபைலை வாங்கும் முன் நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !!



சீனாவின் ஐ-போன் என்று அழைக்கப்படும் சியோமி எம்.ஐ-3 மொபைல் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது . இந்த மொபைலை வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்து இருந்தால் , இந்த 5 விஷயங்களைக் கண்டிப்பாக படியுங்கள் :

1 ) எளிதாக வாங்கிவிட முடியாது :

இந்த மொபைல் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மட்டுமே விற்பனைக்கு வருவதால் ,வந்த வேகத்தில் விற்று விடுகிறது . மிக குறைந்த அளவில் மட்டுமே வருவதால் அது பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதில்லை . எனவே உங்களுக்கு உடனடியாக மொபைல் கிடைக்க வேண்டுமானால் , உங்களுக்கு எதாவது அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும் .

2 ) மெமரி கார்ட் பயன்படுத்த முடியாது :

மொபைலுடன் நீங்கள் பயன்படுத்த அவர்கள் 16 ஜிபி கொடுத்தாலும் , உங்களால் தனியே மெமரி கார்ட் பயன்படுத்தி , மெமரியை அதிகப்படுத்த முடியாது .

3 ) ஹெட்போன் கொடுப்பதில்லை

நீங்கள் சியோமி மொபைலை வாங்கினால் , உங்களுக்கு சார்ஜர் மற்றும் , யு.எஸ்.பி கேபில் மட்டுமே கொடுக்கப்படும் . ஹெட்போன் நீங்கள் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் . மேலும் சியோமி மொபைல் தங்களுக்கென்று தனியே ஸ்கிரின் கார்ட் , மற்றும் மொபைல் ஹெட்செட் அறிமுகப்படுத்தவில்லை . எனவே நீங்கள் வேறு நிறுவனத்தை தான் பயன்படுத்த வேண்டும் .

4 ) சேவை மையங்கள்

போனை வாங்கும் முன்னர் அனைவரும் கேட்கும் கேள்வி , சேவை மையம் இருக்கிறதா என்பது தான் . சியோமி இந்தியாவில் சில இடங்களில் சேவை மையம் திறந்து இருக்கிறது . ஆனால் சேவைத் தரம் பற்றி இனிமேல் தான் தெரிய வரும் .



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies