இந்திய குடியரசு தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் மகள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தையின் 40 ஆண்டு கால டைரியில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இருக்கிறது என கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னால் காங்கிரஸ் அமைச்சர் நட்வர்சிங் காங்கிரஸ் கட்சியில் நடந்த பல்வேறு சம்பவங்களை தனது சுயசரிதையில் வெளிப்படுத்தி கடந்த வாரம் நாட்டையே பெரும் பரபரப்புக்கு ஆளாக்கினார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா, தனது தந்தையின் 40 ஆண்டுகால டைரிகளில் பெரும் ரகசியங்கள் உள்ளது என்றும், ஆனால் அவை நட்வர்சிங் சுயசரிதை போல வெளியே வராது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தவறு செய்யும்போதெல்லாம் என் தந்தை அவர்களை கண்டித்து நல்வழிப்படுத்திய சம்பவங்கள் பல அந்த டைரிகளில் உள்ளதாகவும், ஆனால் அவற்றை வெளியிட்டு பரபரப்பையும், பணத்தையும் சம்பாதிக்கும் எண்ணம் எனக்கோ அல்லது எனது தந்தைக்கோ சிறிதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுப்பது ஒன்றே தனது முழுமையான பணி என்றும், மீண்டும் காங்கிரஸ் மீண்டு இந்திரா காந்தி, ராஜீவ் காலத்து காங்கிரஸை போல பலம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்
முன்னால் காங்கிரஸ் அமைச்சர் நட்வர்சிங் காங்கிரஸ் கட்சியில் நடந்த பல்வேறு சம்பவங்களை தனது சுயசரிதையில் வெளிப்படுத்தி கடந்த வாரம் நாட்டையே பெரும் பரபரப்புக்கு ஆளாக்கினார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா, தனது தந்தையின் 40 ஆண்டுகால டைரிகளில் பெரும் ரகசியங்கள் உள்ளது என்றும், ஆனால் அவை நட்வர்சிங் சுயசரிதை போல வெளியே வராது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தவறு செய்யும்போதெல்லாம் என் தந்தை அவர்களை கண்டித்து நல்வழிப்படுத்திய சம்பவங்கள் பல அந்த டைரிகளில் உள்ளதாகவும், ஆனால் அவற்றை வெளியிட்டு பரபரப்பையும், பணத்தையும் சம்பாதிக்கும் எண்ணம் எனக்கோ அல்லது எனது தந்தைக்கோ சிறிதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுப்பது ஒன்றே தனது முழுமையான பணி என்றும், மீண்டும் காங்கிரஸ் மீண்டு இந்திரா காந்தி, ராஜீவ் காலத்து காங்கிரஸை போல பலம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்