BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 14 August 2014

லிட்டில் இந்தியா கலவர வழக்கில் மேலும் ஒரு இந்தியருக்கு 25 மாத ஜெயில்

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் 'லிட்டில் இந்தியா' பகுதியில் கடந்த வரும் டிசம்பர் மாதம் 8-ந்தேதி பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் 54 போலீசார் காயம் அடைந்தனர். 23 அவசர கால வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சிங்கப்பூர் அரசு இது சம்பந்தமாக பல இந்தியர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. அவர்களுக்கு படிப்படியாக கோர்ட் தண்டனை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று 42 வயதான சாமியப்பன் செல்லதுரை என்ற இந்தியருக்கு கோர்ட் 25 மாத தண்டனை வழங்கியுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக இவரை போலீசார் தேடிவந்தனர். டிசம்பர் 15-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து இந்தியா தப்பி வர முயன்றபோது விமான நிலையத்தில் வைத்து போலீசார் இவரை கைது செய்தனர். இதற்கு முன்னர் 5 பேர் இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர். இவர் 6-வது நபர் ஆவார்.

டிசம்பர் 8-ந்தேதி நடைபெற்ற கலவரத்தின்போது கலவரத்தை தூண்டி விட்டதாகவும், கான்கிரீட் பலகையை உடைத்து வீசியதாகவும் சாமியப்பன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies