வருகிற ஆகஸ்டு 15 ஆம் தேதி , மாநிலங்கள் வைத்து இருக்கும் எரிவாயு நிறுவனங்கள் அனைத்தும் எரிவாயுவின் விலையைக் குறைக்க திட்டமிட்டுள்ளனர் . பெட்ரோல் விலை 2.50 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது .
அவ்வாறு குறைந்தால் அது இந்த மாதத்தின் இரண்டாவது விலை குறைப்பாக இருக்கும் . ஏற்கனவே ஆகஸ்டு 1 ஆம் தேதி பெட்ரோல் விலை 1.09 ரூபாய் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த விலை குறைப்பு நடந்தால் இப்போது 72.51 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்கப்படும் .
இந்த விலை குறைப்பு நடந்தால் நமக்கு சுதந்திர தின பரிசு கிடைத்த மாதிரி தானே ??