BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 4 August 2014

வீட்டிலேயே பிரசவ வலியை தூண்டும் 10 வழிமுறைகள்!!!

அந்த கணத்திற்காகத் தான் கடந்த 9 மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறீர்களா? நாள் நெருங்க நெருங்க உங்களுடைய பொறுமை உங்களை விட்டு விலகிச் செல்கிறதா? எனினும், உங்களால் அமைதியாகவும், எளிமையாகவும் மட்டுமே இருக்க நேரிடும். ஆம், பிரசவத்தை எதிர்கொள்ளும் நேரத்தைப் பற்றியே மேற்கண்ட வரிகள் தெரிவிக்கின்றன. 10 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து, வெளி உலகத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் நேரத்தை எதிர்பார்க்காத தாய்மார்கள் யார் தான் உளர் இந்த உலகிலே! இவ்வாறு குழந்தையை வெளி உலகத்திற்கு கொண்டு வரத் தேவையானது பிரசவ வலியேயன்றி, பொறுமையற்ற மனம் அல்ல. அந்த வகையில், பிரசவ வலியை வீட்டில் இருக்கும் போதே தூண்டுவதற்கு நாம் செய்யக்கூடிய சில நிவாரணங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோமா? பிரசவத்திற்கான நாள் நெருங்கி வந்துவிட்டால், பொறுமையற்று காத்திருக்கும் தாய்மார்கள் மெதுவாக வயிற்றை அழுத்தி குழந்தையை வெளியே வர உதவி தூண்டுவார்கள். இது போன்றே, பிரசவ காலத்தின் இறுதி நாட்களில் பிரசவிக்கும் பொருட்டாக வலியை தூண்டும் சில வழிமுறைகள் உள்ளன. அந்த இனிமையான நேரத்திற்காக காத்திருக்கும் வேளையில், இயற்கையான முறையில் தாய்மார்கள் பிரசவ வலியை தூண்டும் வழிமுறை

நிப்பிள் ஸ்டிமுலேஷன் சிக்கலில்லாத, மென்மையான மற்றும் எளிமையான பிரசவத்தை நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள் எனும் போது, உங்களுக்கு ஏற்ற முறையாக இருப்பது நிப்பிள் ஸ்டிமுலேஷன் ஆகும். கருப்பையில் சுருக்கங்கள் ஏற்படுவதை தூண்டும், ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்யும் முறையாக நிப்பிள் ஸ்டிமுலேஷன் உள்ளதால் எளிமையாகவும், பிரசவ வலியை தூண்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் இந்த முறை உள்ளது. 40 வாரங்களுக்கும் மேலாக நீங்கள் கருவை சுமந்திருந்தால் நிப்பிள் ஸ்டிமுலேஷன் முறை நன்றாக வேலை செய்யும். ஒரு நாளில், ஒரு மணி நேரத்திற்கு மூன்று முறை இந்த வழிமுறையை நீங்கள் செய்ய வேண்டும். இதைச் செய்யும் போது மென்மையாக கையாள வேண்டியது அவசியமாகும். கர்ப்ப கால நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கலான பிரசவங்களின் போது இந்த வழிமுறையை பயன்படுத்த வேண்டாம்.


நடை பழகு! நடப்பதன் மூலம் பிரசவ வலியை இயற்கையாகவே தூண்டும் வாய்ப்புகள் உள்ளன. வயிற்றுக்குள் தலைகீழாக இருக்கும் உங்களுடைய குழந்தையை கருப்பை வாய்க்கு அருகே கொண்டு செல்லும் நிகழ்வாக நடை இருக்கும். நீங்கள் சீராக நடந்து செல்லும் போது, உங்களுடைய குழந்தையின் தலையில் ஏற்படும் சீரான அழுத்தம் ஆக்ஸிடோசின் ஹார்மோனை உற்பத்தி செய்வதால், கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்த முடிகிறது. எனினும், பின்நாட்களில் அதிகமான சக்தி தேவைப்படும் என்பதால் தேவைக்கும் அதிகமாக நடந்து உங்களுடைய சக்திகளை விரயம் செய்து விட வேண்டாம். குழந்தையின் தலைப்பகுதி இடுப்பெலும்பு கூடும் இடத்திற்கு கீழே நகர்ந்து வராத பட்சத்தில், நீங்கள் நடை பயணம் மேற்கொண்டால் குழந்தை சரியான நிலைக்கு வர உதவும். நடப்பதோடு மட்டுமல்லாமல், அப்படியே நகர்ந்து கொண்டிருந்தால், அது பிரசவ வலியை உண்டாக்க உதவும்.


அன்னாசிப்பழம் கழுத்துப்பகுதியை பக்குவமாக கொண்டு வரும் குணம் கொண்ட ‘புரோமெலாய்ன்’ என்ற நொதியை தன்னகத்தே கொண்டுள்ள பழமாக அன்னாசிப் பழம் உள்ளது. 40 வாரங்களைக் கடந்த கர்ப்பிணியாக நீங்கள் இருந்தால், அன்னாசிப் பழங்களை சாப்பிட்டு பிரசவத்தை தூண்ட முடியும். எனினும், அளவுக்கு அதிகமான அன்னாசிப் பழத்தை சாப்பிடுவதால் வயிற்றுப் போக்கு ஏற்படும். அதுவும் குழந்தை பெறப் போகும் நேரத்தில் உங்களுடைய வயிற்றை தொந்தரவு செய்யக்கூடாது. அன்னாசிப் பழத்தை ஜுஸாக சாப்பிடாமல், அப்படியே .ஏனெனில், ஜுஸாக சாப்பிடுவதால் புரோமெலாய்ன் அழிந்து விடும்

ராஸ்பெர்ரி இலை டீ ராஸ்பெர்ரி இலையில் தேநீர் சாப்பிடுவதால் பிரசவம் தூண்டப்படாதெனினும், பிரசவ காலத்தை நெருங்கியுள்ள உங்களுக்கு பல்வேறு வகையிலும் உதவும் குணம் கொண்டதாக ராஸ்பெர்ரி உள்ளது. நீங்கள் இதனை தேநீராகவோ அல்லது மாத்திரைகளாகவோ சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 3 கோப்பை வீதம் குடித்து வரலாம். 32 வார பிரசவ காலத்திற்குப் பிறகு மட்டுமே இந்த தேநீரைப் பருக வேண்டும், அதற்கு முன்னால் அல்ல. ஏனெனில், இந்த தேநீர் கர்ப்பப்பையின் தசைகளை தூண்டும் திறன் கொண்டுள்ளது. இயற்கையான டோனராக இருக்கும் ராஸ்பெர்ரி இலைகளில், கருப்பைக்கு தேவையான இரும்புச்சத்து உள்ளதால், பிரசவத்திற்கு தயாராகும் பெண்களுக்குத் தேவையான இரத்தத்தையும் உற்பத்தி செய்து கொடுக்கும்.

உணவில் தேவை மசாலா கர்ப்ப காலத்தில் பெண்களின் நா நரம்புகள் சுவையான மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை எதிர்பார்ப்பது சகஜம். அதிலும், நன்றாக சமைக்கப்பட்ட உணவுகள் பிரசவத்தை தூணடும் என்றால் சொல்லவும் வேண்டுமா? இது உண்மை என நிரூபிக்கப்படாமல் இருந்தாலும், ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது. பிரசவத்தை தூண்டும் முக்கியமான உணவாக இஞ்சி உள்ளது. குடல்களை தூண்டும் முதன்மையான பணியை செய்வதால், தளர்வாக மலம் கழிக்கச் செய்கிறது. இதன் காரணமாக கருப்பை தூண்டப்பட்டு, சுருக்கமடையத் துவங்குகிறது. இந்நேரத்தில் காலியாக இருக்கும் குடல் பகுதி குழந்தை கீழ் நோக்கி வர ஏதுவாக அமைகின்றன. இந்த அறிகுறியை வைத்தே உங்களுடைய குழந்தை வெளியே வரத் தயாராகி விட்டான்/விட்டாள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஆமணக்கு எண்ணெய் மிகச்சிறந்த மலமிளக்கியாக இருக்கும் ஆமணக்கு எண்ணெய், சில நேரங்களில் பிரசவத்தைத் தூண்டும் பணியையும் செய்கிறது. உங்களுடைய மருத்துவரைக் கலந்தாலோசித்த பின்னர், மிகவும் குறைந்த அளவு (114 மிலி) ஆமணக்கு எண்ணெயை, ஆரஞ்சு பழச்சாறுடன் கலந்து குடிக்கலாம். ஆமணக்கு எண்ணெயின் பிசுபிசுக்கும் குணத்தால், வயிறு தூண்டப்பட்டு, அடிக்கடி மலம் கழிக்கத் த}ண்டப்படுவீர்கள். இதன் காரணமாக கர்ப்பப்பையில் தானாகவே சுருக்கங்கள் ஏற்படத் துவங்கி விடும். சிறிதளவு குடித்தால் கூட உங்களுக்கு குமட்டல் வரலாம் என்பதை நினைவில் கொள்ளவும். சில நேரங்களில் ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்துவது பலனளிக்காது என்பதால், இதனை ஒரு முழுமையான தூண்டுதல் பொருளாகக் கருத வேண்டாம். ஆமணக்கு எண்ணெய் வயிற்றை மட்டுமே பதம் பார்க்கும், தாயையோ அல்லது சேயையோ அல்ல!


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies