BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 1 December 2014

மக்களவைச் செயலராக அனூப் மிஸ்ரா பொறுப்பேற்றார் : காங்கிரஸ் எதிர்ப்பு

மக்களவைச் செயலராக அனூப் மிஸ்ரா திங்கள்கிழமை பொறுப்பேற்றார். அவரது நியமனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனூப் மிஸ்ராவை மக்களவைச் செயலராக நியமித்துள்ளதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திங்கள்கிழமை அறிவித்தார். உடனே, மக்களவையில் காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, அனூப் மிஸ்ராவை நியமித்த முறைக்கு ஆட்சேபம் எழுப்பினார். கார்கே பேசியதாவது: இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியைக் கலந்தாலோசிக்கும் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்பதால் என்னிடம் அவைத் தலைவர் கலந்தாலோசிக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபட்சத்தில், சிபிஐ போன்ற அதிகாரிகளின் நியமனத்தில் தனிப்பெரும் எதிர்க்கட்சித் தலைவரைக் கலந்தாலோசிக்கும் வகையில் சட்டங்களை அரசு திருத்தியுள்ளது. உத்தரப்பிரதேச பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மக்களவைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய மக்களவைச் செயலகத்தில் உள்ள எந்த அதிகாரிக்கும் தகுதி இல்லையா? என்று கார்கே கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ""அனூப் மிஸ்ராவின் நியமனம் என்பது நான் எடுத்த முடிவாகும். இந்த விவகாரம் குறித்து கார்கேவுடன் எனது அறையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். இது குறித்து விவாதிக்க, இந்த அவை உரிய இடம் அல்ல'' என்றார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies