BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 21 November 2014

தமிழரின் கணிதம் : எண்ணியல்

1. சிந்து எழுத்து '௬' 
2. இதன் உச்சரிப்பு 'சே' இதன் வடிவம், மீனைக்குறிக்கும் வார்த்தை. மனித இனத்தின் முதல் தொழில் மீன் பிடித்தல். அதனால் வான் நட்சத்திரங்களையும் விண்மீன் என்றே அழைத்தனர். காண்க: மீன் பிடித்த தொழிலின் காரணமாய் இந்தியாவின் தொன்மையான பெயர் பரத நாடுதான். பிரிட்டனின் தொன்மையான பெயர் பரத்தான், பிரித்தன், பிரிட்டன், (Briton) பரத நாடுதான்.

3. தமிழில் சே, வட மொழியில்-சே (che), எபிரேயத்தில் - sesh, கிரேக்கத்தில்-seks, இலத்தீனில்-sex, ஜெர்மானியத்தில் - sechs, இத்தாலியில் - sei, ஆங்கிலத்தில்-six.

4. தமிழர் கடவுள்களில் ஒருவர் சேயோன் என அழைக்கப்படுகிறார். அவர் முருகன். காரணம் அவருக்கு இன்னொரு பெயர் அருகன், ஆறு படை கொண்டவன். இந்த சேயோன் தமிழர்களின் வானவியல் கண்டுபிடிப்பு. அதனால்தான் 6 முனை கொண்ட நட்சத்திரம் அடையாளமாய் கொள்ளப்படுகிறது. 

எபிரேயர்களின் 'சீயோன்' என்பதற்கும் அடையாளகுறியீடு இதேதான். இந்த ஒப்புமை பற்றி பிறகு பேசலாம். வானில் தெரியும் கார்திகைக்கூட்ட 6 நட்சத்திரங்களின் பெயரே சேயோன் (சேய் - ஆறு). சேயோன், முருகன், சன்முகன் (சேய் முகன்), கார்த்திகேயன் எல்லாம் ஒரே பொருளே. அது ஆறு நட்சத்திரங்கள் என்பதே. கிரேக்கத்தில் இந்த 6 நட்சத்திரங்களுக்குப்பதிலாக, 7 நட்சத்திரங்கள் கொண்டதாக Pleiades என இதே நட்சத்திரக்கூட்டம் அழைக்கப்படுகிறது. காண்க: அந்த நட்சத்திரக்கூட்டம் இது தான்.

இந்த ஆறு நட்ச்சத்திரக்கூட்டம் இருக்கும் நட்ச்சத்திரக்குடும்பத்தின் பெயர் இடபம் (taurus) காளை என்பதே இதன் பொருள். இது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள ஒரு வாகன நிறுவனத்தின் பெயரே தமிழ் 'ஆறு' என்பதைக்கொண்டிருப்பதோடு இந்த ஆறு நட்சத்திரங்களை நிறுவன அடையாளமாகவும் வைத்திருக்கிறது. அந்தப்பெயர் சுபஆறு (Subaru)

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies