பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன் என்ற 14 வயது சிறுவனின் கனவு, வாழ்வில் என்றாவது ஒரு நாள் விமானப்படையில் சேர்ந்து போர் விமானி ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் விதி, எலும்புப் புற்றுநோய் வழியாக அவனைத் துரத்துகிறது.
உடல் முழுக்க புற்றுநோய் பரவி விட்ட நிலையில், சந்தனின் கனவை, தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் அறியவந்து, அவனை ஒரு நாள் போர் விமானி ஆக்கி, இந்திய விமானப்படை மகிழ்ச்சி அடைய வைத்து இருக்கிறது. இது அவனுக்கு பிறந்த நாள் பரிசாக அமைந்து இருக்கிறது.
அவன் விமானப்படை விமானிக்குரிய சீருடை அணிந்து ஒரு நாள் முழுக்க அம்பாலா விமானப்படை தளத்தில் வலம் வந்தான். போர் விமானத்தில் ஏறி, விமானியின் இருக்கையில் அமர்ந்து பார்த்தான். அவனது துணிச்சல், நெஞ்சுரம் அதிகாரிகளை வியக்க வைத்தது. நெஞ்சார வாழ்த்தினர்.