BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 27 November 2014

இலங்கையில் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாட முயன்றவர் கைது



இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து இலங்கை காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறியதாவது:

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, பிரபாகரனின் பிறந்தநாள் வாழ்த்துகள் அடங்கிய சுவரொட்டிகள், மடிக்கணினி, தகவல் சேகரிப்பு கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன. தீவிரவாதத் தலைவரின் பிறந்த நாளை பொது இடங்களில் கொண்டாட அனுமதிக்கமாட்டோம் என்று அவர் கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் புதன்கிழமை கொண்டாடினர்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies