ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ நகரில் கட்டடங்கள் குலுங்கின. இருப்பினும் உயிரிழப்பு, சேத மதிப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.