BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 17 October 2014

SC grants bail with lots of conditions - ஜாமீனுக்காக ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட கடும் நிபந்தனைகள்

Read this in Tamil
The Supreme Court while granting bail today, said the AIADMK chief must advise her party's workers to remain calm. Subramaniya Swamy must not be threated by jayalalitha's followers

Ms Jayalalithaa's lawyers to ready all documents within two months to facilitate an early disposal of her appeal in the Karnataka High Court against her sentence. Court will not accept even a single day delay for this.if the papers were not filed by then, bail would be canceled.

The bail is given on account of her age and health.

உச்சநீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

ஜெயலலிதாவின் உடல்நிலையைக் காரணமாக கொண்டே இவர்களின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு 18 டிசம்பர் வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது.  18 டிசம்பருக்கு  பின் ஒருநாள் கூட கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மேல்முறையீட்டு வழக்குக்காக ஆவணங்களைத் தாக்கல் செய்வதோடு மட்டுமல்லாமல் தலைமை நீதிபதியிடம் சென்று வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தி மனு ஒன்றையும் அளிக்க வேண்டும்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கின் விசாரணையை கர்நாடகா உயர்நீதிமன்றம் மூன்றே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

நீதிபதி குன்ஹா மீதோ தன் மீதோ(தத்து) கன்னடர் என்பதால் தீர்ப்பளித்துவிட்டதாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடாது.

தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. வன்முறை சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிடவேண்டும்.

நீதிபதிகளை விமர்சிப்பது, சுப்பிரமணியன் சுவாமியை விமர்சிப்பது, மிரட்டுவது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது அப்படி நடந்து உச்சநீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் நாங்கள் ஜாமீன் பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

பாலிநாரிமன் மூத்த வழக்கறிஞர் என்பதால் அவரது உறுதிமொழிகளை நம்பி தான் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies