BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 6 October 2014

மோடியுடன் இணைந்தார் சச்சின்

அடுத்த 5 வருடத்திற்குள் இந்தியாவை சுத்தப்படுத்த " சுத்தமான இந்தியா " திட்டத்தை   மோடி துவங்கி வைத்தார் . காந்தியின் பிறந்த நாள் அன்றுஅவரின் கனவான சுத்தமான இந்தியாவை நிறைவேற்ற மோடி தன்னுடைய முதல் படியை எடுத்து வைத்துள்ளார் . இதனை தொடங்கும் விதமாக மோடி அவர்கள் கையில் துடைப்பத்துடன் சுத்தம் செய்து தொடங்கி வைத்தார் . மேலும் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசு அதிகாரிகளும் சுத்தமான இந்தியாவை அமைக்க உறுதி மொழி ஏற்றுள்ளனர் . இந்த உறுதிமொழி மூலம் அரசு அதிகாரிகள் அனைவரும் ஒரு வருடத்தில் 100 மணி நேரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர் .  இந்தியாவின் பெருவாரியான நகரங்கள் சுத்தமாக இல்லாததால் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.



மேலும் இந்த திட்டத்தில் இணையுமாறு 9 நபர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று அவர்கள் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை சுத்தப்படுத்துவதற்காக சச்சின் டெண்டுல்கர் இந்த திட்டத்தில் இணைந்து உள்ளார். அவரது ரசிகர்கள் பலரும் இந்தியாவை சுத்தப்படுத்த உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் மோடியின் இந்த திட்டம் ஒரு அருமையான தேவையான திட்டம் ஆகும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies