BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 21 October 2014

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு



வரும் 2015 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள 47 நாடுகளில் இந்தியாவும் உறுப்பு நாடாக இருந்தது. இந்நிலையில், இந்தியா உள்பட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 4 நாடுகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி, அந்த 4 இடங்களுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா, வங்கதேசம், கத்தார், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 5 நாடுகள் போட்டியிட்டன.

இதில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது. இதேபோல், தாய்லாந்து தவிர மற்ற 3 நாடுகளும் உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஆணையத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். உலக அளவில்பினர்களி நடைபெறும் மனித உரிமை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் எழுப்பவும், விவாதிக்கவும் அந்த உறுப்பினர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சீனா, சவூதி அரேபியா, ரஷியா உள்பட 14 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies