BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 4 October 2014

அரசியலுக்கு வர போகிறார் ரஜினி ? ரசிகர் மன்றங்களில் கணக்கெடுப்பு தொடங்கி விட்டது

கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்வு இந்திய அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அது வேறு எதுவும் இல்லை, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது . அதில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை கிடைத்து உள்ளது. அது மட்டுமில்லாமல் அடுத்த 10 வருடங்களுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் சொல்கிறது. இப்போது அவரது கட்சி லோக் சபாவில் இந்திய அளவில் 3 வது பெரிய கட்சி என்னும் அந்தஸ்தை பெற்று உள்ளது. அவர் அசுர வேகத்தில் உயர்ந்து வந்தார்.

இப்போது அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அடுத்து திமுக வுக்கு ஆப்பு வைக்கும் விதமாக 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கு வர உள்ளது. அதில் கருணாநிதியின் மகளுக்கும் மனைவிக்கும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2 மிக பெரிய அரசியல் கட்சிகளுக்கு கெட்ட பெயர். அதனை பயன்படுத்தி கொள்ள தேமுதிக நினைத்தது. ஆனால் பாஜகவோ வேகமாக செயல்பட்டு வருகிறது. மோடி ரஜினியை தனது ஆயுதமாக எடுத்துள்ளார்.

அடுத்து வரும் தேர்தலை ரஜினியின் தலைமையில் சந்திக்க பாஜக நினைக்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நேரம் தான் அரசியலுக்கு வருவதற்கு சரியான நேரம் என ரஜினி நினைக்கிறார். இப்போது அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. ரஜினி ரசிகர் மன்றங்கள் அதில் உள்ள ரசிகர்கள் கணக்கை எடுக்க தொடங்கி விட்டார்கள். இதனை வைத்து விரைவில் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பு ரஜினியிடம் இருந்து வரலாம் என எதிர்பார்க்கலாம்.


பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies