BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 6 October 2014

பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கும் ஆனால் போராட்டமும் நடக்கும்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி 4 வருட சிறை தண்டனையுடன் சிறையில் அடைத்து உள்ளார்கள். இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வாரம் கேபிள் டிவி நிறுவனம் போராட்டம் நடத்தியது. அதற்கு அடுத்து தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் ஒடவில்லை. இந்நிலையில் இன்று  போராட்டத்தில் இறங்குவதாக தனியார் பள்ளிகள் அறிவித்து இருந்தது



இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு வந்தது. போராட்டத்தில் இறங்குவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் நலனுக்காக போராட்டத்தில் இறங்கலாம், ஒரு பொது நலனுக்காக போராட்டத்தில் இறங்கலாம். ஆனால் எந்த நலனும் இல்லாமல் ஒரு ஊழல் குற்றவாளியை தண்டித்ததற்காக போராட்டத்தில் இறங்குவது என்பது முட்டாள்தனமான செயல் ஆகும். இது ஊழல் தொடர்பான கண்ணோட்டத்தில் மாணவர்களின் மனதை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஊழல் செய்வது தவறில்லை என்று கூட அவர்கள் எண்ணுவார்கள்.

அது மட்டுமில்லாமல் இந்த சமயத்தில் விடுமுறை என்பது அவர்களின் கல்வியை பாதிக்கும். இன்று தேர்வுகள் வேறு நடக்க உள்ளன. இதனால் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் இதில் தலையீட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும். பள்ளி தாளாளர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies