BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 20 October 2014

லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையை கழற்றியது தவறு என ஒப்பு கொண்ட கங்குலி



2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து உடனான தொடரின் போது கங்குலியின் தலைமையில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதும் இந்திய கேப்டன் கங்குலி தனது சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடினார்.இந்த வெற்றி கொண்டாட்டம் உலகம் முழுவதும் பிரபலமானது. அனைவருக்கும் கங்குலி என்றாலே இந்த வெற்றி கொண்டாட்டம் தான் நியாபத்துக்கு வரும். அதனாலே அவருக்கு பல ரசிகர்கள் சேர்ந்தார்கள். இன்று கூகுளில் சென்று லார்ட்ஸ் மைதானம் என டைப் செய்தால் கங்குலி தனது சட்டையை அவிழ்க்கும் போட்டோ வரும்.


தனது இந்த செயல் தவறானது என 12 ஆண்டுகள் கழித்து கங்குலி கூறியுள்ளார். நம்மிடம் பல திறமைகள் உள்ளது ஆனால் அவை எல்லாம் முடங்கி கிடக்கிறது. ஆக்ரோஷமாக செயல்பட்டால் தான் அந்த திறமை வெளிப்படும் என நம்பினேன். அதனால் தான் ஆக்ரோஷமாக செயல்பட்டேன். நெருக்கடியில் இருந்து விடுபட்ட வேகத்தில் வெற்றியை அவ்வாறு கொண்டாடிவிட்டேன் . அது இப்போது தவறு என உணர்கிறேன் என்றார் சவுரவ் கங்குலி.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies