BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 20 October 2014

தமிழகத்தில் ஜெயலலிதாவை பாஜக எதிர்க்கும் - தலைமை அறிவிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் 2 முறை ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதன் பிறகு இறுதியாக அக்டோபர் 17 ஆம் தேதி அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


சிறையில் இருந்து வெளியில் வந்த ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி வாழ்த்து தெரிவித்து இருந்தார். விரைவில் அவர் முதல்வர் பதவியில் மீண்டும் அமர வேண்டும் என கூறி இருந்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சைய கிளப்பியது. பாஜகவை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் எப்படி ஒரு ஊழல் குற்றவாளிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கலாம். அப்படியெனில் பாஜகவும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உள்ளதா சந்தேகம் எழுந்தது. இதற்கு பாஜக மூத்த தலைவர் முரளிதர் ராவ் பதிலளித்தார். மேனகா காந்தியின் கருத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுகவை பாஜக முழுமையாக எதிர்க்கிறது என கூறியுள்ளார்


பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies