BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 9 October 2014

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் சேலினால் வந்த தலைவலி !! கேரண்டி கொடுக்க மாட்டோம் என பின் வாங்கும் நிறுவனங்கள் ..



பிக் பில்லியன் டே சேலினால் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு தலைவலி கூடிக் கொண்டே இருக்கிறது . சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருள் கொடுக்க முடிந்தது . மற்றவர்களுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியது . இப்போது இந்த கடிதம் மட்டும் போதாது என்ற நிலையில் அவர்கள் இருக்கின்றனர் . அவர்களுக்கு புதிய பிரச்சனையாக  சாம்சங் , சோனி . எல்.ஜி போன்ற முன்னனி நிறுவனங்கள் ப்ளிப்கார்ட்டின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் .

சில நிறுவனங்கள் தங்களின் பொருட்களை இந்த தளம் மூலம் விற்பதையும் நிறுத்தியுள்ளனர் . மேலும் சிலர் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் யோசனை செய்து வருகின்றனர் .

இது குறித்து முன்னனி நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " ப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் எங்களால் நியமிக்கப்படாத டீலர்கள் மூலம் பெறப்பட்ட பொருட்கள் . அந்த பொருட்களுக்கு நாங்கள் எப்படி வாரண்டி தர முடியும் " என்றார் . இன்னொருவர் , " இந்த அதிரடி தள்ளுபடி பல வியாபாரிகளின் வியாபாரத்தை பாதித்துள்ளது . எனவே இது போன்று இனி நடக்காது என பிளிப்கார்ட் நிறுவனம் உறுதியளிக்கும் வரை அந்த நிறுவனத்துக்கு பொருட்கள் தரப்பட மாட்டாது என நிறுவனங்கள் கூறியுள்ளனர் " என்றார் .

பிளிப்கார்ட் இதற்கு என்ன செய்யப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ..

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies