BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 4 August 2014

மோடியின் ஆட்டோகிராப்பால் உலக சாதனை படைக்கப்படுமா




நேற்று 2 நாள் சுற்றுபயணமாக மோடி நேபாள் சென்றார். நேபாள் தலைநகர் காட்மாண்டுவில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 5–ம் வகுப்பு படிக்கும் மாணவி மானசி சர்மா. இவருக்கு  பத்து வயது ஆகிறது . இவர் தனது தந்தையுடன் மோடி தங்கி இருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று மோடியின் ஆட்டோகிராப்பை பெற்றார். உலகின் பிரபலமானவர்களிடம் இருந்து ஆட்டோகிராப் பெற்று உலக சாதனை படைக்க வேண்டும் என்பது அந்த சிறுமியின் விருப்பம் ஆகும்.

மோடி அளித்த அந்த ஆட்டோகிராப்பில் ,நீ வளர்ந்து பெரியவள் ஆனதும் மனித சமுதாயத்துக்கு சேவை செய்; அது தான் சிறந்த சேவை’ என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார். இது போன்று அந்த சிறுமி இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராணுவ தளபதி விக்ரம் சிங், கிரிக்கெட் கேப்டன் தோனி, இந்தி திரை உலக நட்சத்திரங்களான வினோத் கன்னா, கோவிந்தா மற்றும் ராக் இசைப் பாடகர் பிரேயன் ஆடம்ஸ் ஆகியோரிடம் இருந்து ஏற்கனவே ஆட்டோகிராப் பெற்றுள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies