BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 5 August 2014

செய்தி வாசிப்பாளர் தலையில் பர்தா அணியாமல் டிவியில் தோன்றியதால் சவூதியில் ஏற்பட்ட பரபரப்பு !!



இதற்கு முன்னெப்போதும் இல்லாத நிலையில் , சவூதியில் செய்தி வாசிப்பாளராக பணி செய்யும் பெண் , தலையில் பர்தா இல்லாமல் திரையில் செய்தி வாசித்தார் . இதனால் கடும் விதிமுறைகளை பின்பற்றும் சவூதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

சவூதியில் பெண்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் உடை உடுத்த வேண்டும் . பெயர் வெளியிடாத இந்த செய்தி வாசிப்பாளர் லண்டனில் இருந்து , அல் எக்பரியா என்னும் சேனலுக்கு செய்தி வாசித்தார் .

செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் , " அந்த பெண் செய்தி வாசிக்கும் ஸ்டுடியோ லண்டனில் இருந்தது . எங்கள் நாட்டின் மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்துக்கு எதிராக ஏற்படும் எந்த செயலையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் . இது போன்ற செயல் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம் " என்றார் .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies