BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 12 August 2014

காசோலையின்றி ‘வெற்று கவர்’ வழங்கிய அரியானா முதல்–மந்திரி மாற்றுத்திறனாளி வீரர்கள் அதிர்ச்சி



இந்த வகையில் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் பிரஷாந்த் கர்மாகர், ஜெய்தீப் சிங் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கவரை பிரித்து பார்த்தனர். ஆனால் அதில் ரூ.5 லட்சத்திற்கான எந்த காசோலையும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஜெய்தீப் சிங் கூறுகையில், ‘காமன்வெல்த்தில் வட்டு எறிதலில் நான் 4–வது இடத்தை பிடித்தேன். கவரை திறந்து பார்த்த போது அதில் எதுவும் இல்லாததை கண்டு உண்மையிலேயே நான் வேதனைக்குள்ளானேன். இந்த அரசு விளையாட்டு வீரர்களை இந்த மாதிரி நடத்தியிருக்க கூடாது’ என்றார்.

ஏதோ தவறு நடந்து விட்டதை ஒப்புக் கொண்டு அரியானா மாநில விளையாட்டுத்துறை, 10 நாட்களுக்குள் அவர்களுக்கு உரிய காசோலை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த மாநில முதல்–மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா ரூ.13 கோடியே 72 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கினார். பதக்கம் வெல்லாத போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்பட்டன.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies