சியோமியின் எம்.ஐ.3 மொபைலுக்கு இருக்கும் மவுசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை வாங்குவதற்காக ஒரு போரே நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் விற்பனைக்கு வந்த மொபைல் நொடிகளில் விற்று தீர்ந்து விடுகிறது. முதல் 3 ரவுண்டில் 35 ஆயிரம் மொபைல்கள் விற்று தீர்ந்து இருந்தன. 4 வது ரவுண்டு இன்று நடந்தது. இதில் 20 ஆயிரம் மொபைல்கள் விற்பனைக்கு வந்தன. அவை அனைத்தும் 2.4 செகன்டுகளில் விற்று தீர்ந்து விட்டன. அடுத்த ரவுண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவு செய்வதற்கான நேரம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
இந்த மொபைல் பிளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் தான் கிடைக்கும். இதனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என சிலர் தவம் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.