BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 9 December 2014

பெட்ரோலுக்கு பதிலாக காற்றை நிரப்பும் பங்க்! வீடியோவால் அம்பலம்! - Petrol outlet in punjab caught on camera while selling air instead of petrol

பெட்ரோல் பங்குகளில் விதவிதமான மோசடிகள் அரங்கேறுவது சகஜமாகிவிட்டது. ஆட்டோ மீட்டரில் சூடு வைப்பதை போல பெட்ரோல் பங்கிலுள்ள மீட்டரிலும் சூடு வைத்த விவகாரம் வீடியோவாக பரவி வருகிறது.

பஞ்சாப்பிலுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் வழக்கமாக பெட்ரோல் போடவரும் ஒரு வாடிக்கையாளருக்கு, அந்த பெட்ரோல் பங்க் அளிக்கும் பெட்ரோலின் அளவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மற்ற பங்குகளில் பெட்ரோல் போடுவதற்கும், இங்கு போடுவதற்கும் இடையே அதிக வித்தியாசம் இருப்பதாக உணர்ந்தார். 4 லிட்டர் பெட்ரோல் போட்டால், 3 லிட்டர் அளவுக்குதான் மைலேஜ் வருவதை கவனித்துள்ளார். இதையடுத்து போலீசாரின் உதவியுடன் அந்த பெட்ரோல் பங்கில் சோதனை நடத்தியபோது, ஒரு ரகசியம் அம்பலமானது.

அதாவது, குழாயில் பெட்ரோல் வெளியே வராவிட்டாலும்கூட மீட்டர் மட்டுமே ஓடக்கூடிய நவீன டெக்னாலஜியை அந்த பங்க் நிர்வாகிகள் கையாண்டுள்ளது அப்போதுதான் தெரியவந்தது. தேவர்மகன் திரைப்படத்தில் வரும் பாடலை போல "வெறும் காத்துதாங்க வருது" என்று வாடிக்கையாளர்களும் பாட வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது அந்த பெட்ரோல் பங்க். இந்த வீடியோவை பார்த்தால் மோசடியை புரிந்துகொள்ள முடியும்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies