BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 6 October 2014

நாளை பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும், ஸ்ட்ரைக் இல்லை - பாமக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் எதிரொலி

7ம் தேதி நாளை தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர், இது பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை உருவாக்கியது, பாட்டாளி மக்கள் கட்சி இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர் க. பாலு அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அறிவித்த நாளைய வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் பா.ம.க வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கீழ்கண்ட உத்தரவுகளை தமிழக அரசுக்கு பிறப்பித்தது

பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நீதிபதி குன்ஹாவை விமர்சித்து வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies