BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 23 October 2014

பதக்கம் வேண்டாம் என்று புறக்கணித்த சரிதா தேவிக்கு தடை விதிக்கப்பட்டது !!


 நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் விதமாக தனக்கு அளிக்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்தார் . அதனை தன்னுடன் மோதிய சக வீராங்கனையிடம் ஒப்படைத்து விட்டார் . பின்னர் ஒரு நாள் கழித்து அவர் இது குறித்து ஆசிய ஒலிம்பிக் அமைப்பிடம் மன்னிப்பு கேட்டார் .

ஆனால் சர்வதேச பாக்சிங் அமைப்பு இவரை சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தடை செய்துள்ளது . அவர்கள் தெரிவிக்கும் வரை இவரால் பங்கு கொள்ள முடியாது . இவருடைய பயிற்சியாளர்களையும் தடை செய்துள்ளனர் . இதனால் இவரால் அடுத்த மாதம் நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியாது .

இது குறித்து சரிதாவின் கணவர் கூறுகையில் நாங்கள் பதில் கடிதம் தயாரித்துக் கொண்டு இருக்கிறோம் . இந்த பிரச்சனை விரைவில் முடிவுபெறும் என்று தெரிகிறது  என்றார் .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies