As Jayalalitha was convicted and jailed for amassing un-accounted wealth , DMK is planning to use this opportunity and get back their image in Tamil Nadu . They are going to implement this in Srirangam by-elections .
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புக்காக தான் திமுக பல ஆண்டுகளாக காத்து இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே தீர்ப்பு வந்து விட்டது. ஆனால் அவர்களுக்கு வர வேண்டிய பயன் மட்டும் இன்னும் வரவில்லை.
ஜெயலலிதா சிறையில் இருப்பதை வைத்து அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி மக்களிடையே அனுதாபம் தேட நினைத்தனர். அதனை இப்போது திமுகவினர் புரிந்து கொண்டனர். அது நடந்தால் இந்த தீர்ப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என புரிந்து கொண்டார்கள் .
அதனால் தான் கருணாநிதி தனது மவுனத்தை கலைத்து ஜெயலலிதா ஊழல் செய்து விட்டு தான் தண்டனை பெற்றுள்ளார் என கூறினார். இது குறித்து மக்களிடையே பிராச்சாரம் செய்யுமாறு கூறியுள்ளார். ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து விட்டார்.
அதனால் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். இதனை வைத்து பல திட்டங்களை வைத்து உள்ளது திமுக. இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை குற்றவாளி என கூறி திமுகவின் பிராச்சாரம் இருக்கும். ஸ்ரீரங்கம் அதிமுகவின் கோட்டை. இந்த தீர்ப்பு மக்கள் மனதை எந்த அளவு மாற்றி உள்ளது என்பது குறித்து இந்த தேர்தலின் மூலம் அவர்களால் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு 2016 தேர்தலுக்கு வியூகங்கள் அமைக்க முடியும். எனவே இந்த இடைத்தேர்தலுக்காக இப்போது இருந்தே வேலைகளில் இறங்கி விட்டது திமுக.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புக்காக தான் திமுக பல ஆண்டுகளாக காத்து இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே தீர்ப்பு வந்து விட்டது. ஆனால் அவர்களுக்கு வர வேண்டிய பயன் மட்டும் இன்னும் வரவில்லை.
ஜெயலலிதா சிறையில் இருப்பதை வைத்து அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி மக்களிடையே அனுதாபம் தேட நினைத்தனர். அதனை இப்போது திமுகவினர் புரிந்து கொண்டனர். அது நடந்தால் இந்த தீர்ப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என புரிந்து கொண்டார்கள் .
அதனால் தான் கருணாநிதி தனது மவுனத்தை கலைத்து ஜெயலலிதா ஊழல் செய்து விட்டு தான் தண்டனை பெற்றுள்ளார் என கூறினார். இது குறித்து மக்களிடையே பிராச்சாரம் செய்யுமாறு கூறியுள்ளார். ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து விட்டார்.
அதனால் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். இதனை வைத்து பல திட்டங்களை வைத்து உள்ளது திமுக. இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை குற்றவாளி என கூறி திமுகவின் பிராச்சாரம் இருக்கும். ஸ்ரீரங்கம் அதிமுகவின் கோட்டை. இந்த தீர்ப்பு மக்கள் மனதை எந்த அளவு மாற்றி உள்ளது என்பது குறித்து இந்த தேர்தலின் மூலம் அவர்களால் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு 2016 தேர்தலுக்கு வியூகங்கள் அமைக்க முடியும். எனவே இந்த இடைத்தேர்தலுக்காக இப்போது இருந்தே வேலைகளில் இறங்கி விட்டது திமுக.