BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 20 October 2014

கத்தி படம் வெளியாக இருந்த சத்யம் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !!



சென்னை சத்யம் தியேட்டரில் கத்தி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது .

நடிகர் விஜய் நடித்து , ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் " கத்தி " . இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் கத்தி படத்திற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .

பின்னர் தமிழ் அமைப்புகளும் , தயாரிப்பு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் படம் திட்டமிட்டபடியே தீபாவளி அன்று ரீலிஸ் செய்யப்படும் என்றனர் . சில தியேட்டர்களில் புக்கிங்கும் தொடங்கியது .

ஆனால் நேற்று இரவு 11.45 மணி அளவில் சென்னை சத்யம் தியேட்டரை மர்ம் நபர்கள் தாக்கியுள்ளனர் . மூன்று பெட்ரோல் குண்டுகளையும் வீசியுள்ளனர் . தியேட்டரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது .


இது குறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர் .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies