BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 11 December 2014

2014-ஆம் ஆண்டின் சிறந்த ஆல்பமாக கத்தி படத்தின் பாடல்கள் தேர்வு



விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கத்தி’. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இவருடைய இசையில் வெளிவந்த பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரது அற்புதமான இசையை பாராட்டி விஜய், அனிருத்துக்கு பியானோ ஒன்றை பரிசளித்திருந்தார்.
இந்நிலையில், கத்தி படம் அனிருத்துக்கு மேலும் ஒரு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ படத்தின் பாடல்களை ஐடியூன்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இது படக்குழுவினருக்கும், அனிருத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அனிருத்துக்கு படக்குழுவினரும், திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இப்படத்தின் பாடல்கள் உரிமையை பெற்ற ஈராஸ் மியூசிக் நிறுவனம் அனிருத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, ‘கத்தி’ படத்தின் பாடல்கள் சிறந்த ஆல்பமாக தேர்வானதை எண்ணி பெருமை அடைகிறோம் என்றும் அறிவித்துள்ளது. அனிருத் ஐ-டியூன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies