விகடன் ப்ளஸ் இதழில் வெளியான அரசியல் கார்ட்டூனை தொடர்ந்து மத்திய அரசு விகடனின் இணையதளத்தை முடக்கியிருக்கிறது. அரசின் இந்த ஏதேச்சதிகார போக்கை பல தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். விகடனுக்காகவும் பத்திரிகை சுதந்திரத்துக்காகவும் குரல் எழுப்பியிருப்பவர்களின் மிக முக்கியமானவர் இந்து என்.ராம். விகடன் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை அரசியலமைப்பை மீறிய பழி வாங்கும் நடவடிக்கை என கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். இந்நிலையில், விகடன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் குறித்து என்.ராம் அவர்களிடம் இன்னும் விரிவாக பேசினோம்.
`தி இந்து’ என்.ராம்
"விகடன் ப்ளஸ் இணைய இதழில் வெளியான அந்த கார்ட்டூனை நீங்களும் பார்த்திருப்பீர்கள். முதலில் அந்த கார்ட்டூனை பற்றிய உங்களின் அபிப்ராயத்தை சொல்லுங்களேன்."
"அது ஒரு சிறந்த கார்டூன். நையாண்டிமிக்கதாக இருந்தாலும் அதில் அர்த்தமும் இருந்தது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பே பிப்ரவரி 10 ஆம் தேதி விகடன் ப்ளஸ் இதழில் அந்த கார்டூன் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து இராணுவ விமானத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர்கள் இங்கே அழைத்துவரப்படுவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகளும் அதைப் பற்றி பேசியிருக்கின்றன. ஆனால், நம்முடைய அரசால் அதை பிரச்சனையாக்கி அமெரிக்காவுடன் பேச முடியவில்லை. அமெரிக்க பயணத்துக்கு முன்பாகவே பிரதமர் கையறு நிலையில்தான் இருந்தார். அதை குறிக்கும் வகையில்தான் அந்த கார்டூனும் வரையப்பட்டிருக்கிறது. அது யாரையும் இழிவுப்படுத்தும் நோக்கத்திலெல்லாம் இல்லை. பழைய தலைவர்களெல்லாம் ஜனநாயகத்தன்மையோடு நடந்துகொள்வார்கள். கிருஷ்ணமேனன், நேரு போன்றவர்களை பற்றியே கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருக்கிறது."
என்.ராம்
"நேருவை விமர்சித்தே கேலிச்சித்திரங்கள் வெளியாகியிருக்கிறது என்கிறீர்கள். ஆனால், இன்றைக்கு பிரதமரை எப்படி விமர்சிப்பீர்கள் என பதில்வாதம் வைக்கிறார்களே?"
"அதுதான் இங்கே நிகழ்ந்திருக்கும் மாற்றம். அதிகார மமதையில் எல்லாவற்றையும் செய்கிறார்கள். தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அந்த காலத்து தலைவர்களிடம் சகிப்புத்தன்மை இருந்தது. நான் கார்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மணனின் ரசிகன். அவர் காந்தியை பற்றியே கார்டூன் வரைந்திருக்கிறார். அதை வாங்கி என் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறேன். முன்பிருந்த தலைவர்கள் பெருந்தன்மைமிக்கவர்களாக இருந்தனர். அவர்களை பற்றி வெளியாகும் கார்டூன்களை அவர்களே ரசிப்பார்கள். குடும்பத்தினரிடமெல்லாம் காட்டி மகிழ்வார்கள். ட்ரம்பை சர்வாதிகாரி என்கிறோம். ஆனால், அவர் கூட ஒரு கார்டூனுக்கு இப்படியான எதிர்வினைகளை ஆற்றிருக்க மாட்டார். பத்திரிகை சுதந்திரத்தை இணையத்திலும் மழுங்கடிக்கும் வேலையை இவர்கள் செய்திருக்கிறார்கள். விகடன் அடுத்த ஆண்டில் நூற்றாண்டை கொண்டாடவிருக்கிறது. அதற்கென தனி மதிப்பும் மரியாதையும் பத்திரிகை உலகில் இருக்கிறது. விகடனின் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன் இணையத்தில் விகடனுக்காக பெரிய அடித்தளத்தை முன்பே அமைத்துவிட்டார். டிஜிட்டல் உலகில் விகடன் முன்பே பரந்துபட்டு இயங்க ஆரம்பித்துவிட்டது. அப்படியிருக்க அவர்களின் வணிகத்தை மொத்தமாக முடக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். முடக்க நடவடிக்கையை எந்த முறையில் எடுத்திருக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், நோட்டீஸ் வழங்காமல் எந்த செயல்முறையையும் பின்பற்றாமல் தளத்தை முடக்கியிருக்கிறார்கள். தகவல் தொடர்பு விதிகள் 2021ஐ பின்பற்றியிருக்க வேண்டும்."
"அதையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முடக்கம் செய்து 24 மணி நேரம் கழித்து தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடமிருந்து ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அடுத்த ஒரு நாளில் உங்கள் தரப்பு வாதத்தை எங்களிடம் முன்வைக்கலாம் எனவும் கூறியிருக்கிறார்கள். நியாயமே இல்லாத நடவடிக்கை இது. ஆனால், விகடனுக்கு இது ஒன்றும் புதிதில்லை. 1987 இல் என்னுடைய நண்பர் பாலச்சுப்பிரமணியனை அப்போதைய எம்.ஜி.ஆர் ஆட்சியில் இதேபோல விகடனில் வெளிவந்த கார்டூனுக்காக கைது செய்தார்கள். இத்தனைக்கும் அது வாசகர்கள் கொடுத்த ஐடியாவில் வெளியான கார்டூன். இரண்டு எம்.பி, எம்.எல்.ஏ க்களை திருடனாகவும் கொள்ளைக்காரனாகவும் சித்தரித்து அந்த கார்டூன் வரையப்பட்டிருக்கும். அதை பிரச்சனையாக்கி பாலசுப்பிரமணியத்தை கைது செய்தார்கள்.
என்.ராம்
அந்த விவகாரமும் தேசிய அளவில் பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் சுதாரித்துக் கொண்டு இரண்டே நாளில் பாலசுப்பிரமணித்தை விடுவித்து விட்டார். அந்த வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானது. 1994 இல் அந்த வழக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என குறிப்பிட்ட நீதிமன்றம் விகடனுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டது. அதன்படி 1000 ரூபாயை பாலசுப்பிரமணியன் நஷ்ட ஈடாக பெற்றார். அந்த 1000 ரூபாயை ப்ரேம் போட்டு இன்னும் விகடன் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள். அது காலத்துக்கும் மிக முக்கியமான மெசேஜை கடத்திக் கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையெல்லாம் கூட இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து ரிப்போர்ட் செய்திருந்தனர். இப்போது இவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை மோசமான முன்னுதாரணமாக மாறக்கூடும். ஒருவரை எனக்கு பிடிக்கவில்லையென்றால் டிஜிட்டலில் அவரை முழுமையாக முடக்க முடியும் என காட்டியிருக்கின்றனர். மேலும், இதில் மக்களின் தகவல் அறியும் உரிமையும் பாதிக்கப்படுகிறது. அடிப்படை கருத்துரிமைகளை உறுதிசெய்யும் அரசியலமைப்புச் சட்டம் 19(1)a க்கு எதிரானது. மேலும், 19(2) பிரிவின் படி நியாயமான காரணங்களுக்காக முடக்கங்களையும் கட்டுப்பாடுகளையும் அரசு விதிக்க முடியும். ஆனால், அதற்கும் ஒரு 8 காரணிகள் உண்டு. அதனடிப்படையில்தான் செய்ய முடியும். இவர்கள் அதையும் பின்பற்றவில்லை. இது அரசியலமைப்பை மீறிய செயல்."
"அண்ணாமலை புகார் கொடுத்தார் என்பதற்காக ஒரு ஊடகத்தை முடக்குகிறார்கள். பா.ஜ.க என்கிற கட்சியின் அபிலாஷைகளுக்கு அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?"
"அண்ணாமலை மட்டுமா? ஆளுநர் ஆர்.என்.ரவி கூட அப்படித்தானே இருக்கிறார். பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸூம் செய்ய வேண்டிய வேலைகளை அவர் செய்துகொண்டிருக்கிறார். கட்சிக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதென்றே தெரியவில்லை. Alice's Adventures in Wonderland நூலில் Queen of Hearts, 'Sentence First, Verdict Afterwards.' என்பார். முதலில் தண்டனையை கொடுத்துவிட்டு அதன்பிறகுதான் விசாரணையே நடத்துவார்கள். அதைத்தான் இப்போது மத்திய அரசும் செய்திருக்கிறது. இந்த விஷயத்தில் எனக்கு அந்த நூல்தான் நியாபகத்துக்கு வருகிறது."
இந்து என்.ராம்
"ஊடகங்களின் கருத்துச்சுதந்திரங்களில் தலையிடும் நிகழ்வு தொடர்ந்துகொண்டே இருக்கிறதே. இந்த போக்கு கவலையளிப்பதாக இருக்கிறதே!"
"1988 இல் ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் ஊழலை பற்றி பத்திரிகைகள் வெளிப்படையாக எழுதிக் கொண்டிருந்தன. அப்போது அவர்களை முடக்கும் வகையில் ராஜீவ் காந்தி சட்டத்திட்டங்களை வலுப்படுத்தினர். அந்த சமயத்தில் அத்தனை பத்திரிகையாளர்களும் தெருவில் இறங்கி போராடினார்கள். 2003 இல் ஜெயலலிதா ஆட்சியில் தி இந்துவை சேர்ந்த 5 சீனியர்களை கைது செய்ய முயன்றார்கள். நாங்கள் அவர்களிடம் சிக்கவில்லை. அப்போதும் இந்தியா முழுவதுமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
ஒரு பத்திரிகை பாதிக்கப்படும்போது போட்டி மனப்பான்மையையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எது நியாயம் எது அநியாயம் என்பதை அறிந்து அனைவரும் இறங்கி போராட வேண்டும். இந்த விவகாரத்தில் விகடனுக்கு எல்லா தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் அரசு தோற்கடிக்கப்படும் என்கிற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது."
விகடன் ப்ளஸ் இதழில் வெளியான அரசியல் கார்ட்டூனை தொடர்ந்து மத்திய அரசு விகடனின் இணையதளத்தை முடக்கியிருக்கிறது. அரசின் இந்த ஏதேச்சதிகார போக்கை பல தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். விகடனுக்காகவும் பத்திரிகை சுதந்திரத்துக்காகவும் குரல் எழுப்பியிருப்பவர்களின் மிக முக்கியமானவர் இந்து என்.ராம். விகடன் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை அரசியலமைப்பை மீறிய பழி வாங்கும் நடவடிக்கை என கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். இந்நிலையில், விகடன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் குறித்து என்.ராம் அவர்களிடம் இன்னும் விரிவாக பேசினோம்.
`தி இந்து’ என்.ராம்
"விகடன் ப்ளஸ் இணைய இதழில் வெளியான அந்த கார்ட்டூனை நீங்களும் பார்த்திருப்பீர்கள். முதலில் அந்த கார்ட்டூனை பற்றிய உங்களின் அபிப்ராயத்தை சொல்லுங்களேன்."
"அது ஒரு சிறந்த கார்டூன். நையாண்டிமிக்கதாக இருந்தாலும் அதில் அர்த்தமும் இருந்தது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பே பிப்ரவரி 10 ஆம் தேதி விகடன் ப்ளஸ் இதழில் அந்த கார்டூன் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து இராணுவ விமானத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர்கள் இங்கே அழைத்துவரப்படுவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகளும் அதைப் பற்றி பேசியிருக்கின்றன. ஆனால், நம்முடைய அரசால் அதை பிரச்சனையாக்கி அமெரிக்காவுடன் பேச முடியவில்லை. அமெரிக்க பயணத்துக்கு முன்பாகவே பிரதமர் கையறு நிலையில்தான் இருந்தார். அதை குறிக்கும் வகையில்தான் அந்த கார்டூனும் வரையப்பட்டிருக்கிறது. அது யாரையும் இழிவுப்படுத்தும் நோக்கத்திலெல்லாம் இல்லை. பழைய தலைவர்களெல்லாம் ஜனநாயகத்தன்மையோடு நடந்துகொள்வார்கள். கிருஷ்ணமேனன், நேரு போன்றவர்களை பற்றியே கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருக்கிறது."
என்.ராம்
"நேருவை விமர்சித்தே கேலிச்சித்திரங்கள் வெளியாகியிருக்கிறது என்கிறீர்கள். ஆனால், இன்றைக்கு பிரதமரை எப்படி விமர்சிப்பீர்கள் என பதில்வாதம் வைக்கிறார்களே?"
"அதுதான் இங்கே நிகழ்ந்திருக்கும் மாற்றம். அதிகார மமதையில் எல்லாவற்றையும் செய்கிறார்கள். தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அந்த காலத்து தலைவர்களிடம் சகிப்புத்தன்மை இருந்தது. நான் கார்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மணனின் ரசிகன். அவர் காந்தியை பற்றியே கார்டூன் வரைந்திருக்கிறார். அதை வாங்கி என் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறேன். முன்பிருந்த தலைவர்கள் பெருந்தன்மைமிக்கவர்களாக இருந்தனர். அவர்களை பற்றி வெளியாகும் கார்டூன்களை அவர்களே ரசிப்பார்கள். குடும்பத்தினரிடமெல்லாம் காட்டி மகிழ்வார்கள். ட்ரம்பை சர்வாதிகாரி என்கிறோம். ஆனால், அவர் கூட ஒரு கார்டூனுக்கு இப்படியான எதிர்வினைகளை ஆற்றிருக்க மாட்டார். பத்திரிகை சுதந்திரத்தை இணையத்திலும் மழுங்கடிக்கும் வேலையை இவர்கள் செய்திருக்கிறார்கள். விகடன் அடுத்த ஆண்டில் நூற்றாண்டை கொண்டாடவிருக்கிறது. அதற்கென தனி மதிப்பும் மரியாதையும் பத்திரிகை உலகில் இருக்கிறது. விகடனின் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன் இணையத்தில் விகடனுக்காக பெரிய அடித்தளத்தை முன்பே அமைத்துவிட்டார். டிஜிட்டல் உலகில் விகடன் முன்பே பரந்துபட்டு இயங்க ஆரம்பித்துவிட்டது. அப்படியிருக்க அவர்களின் வணிகத்தை மொத்தமாக முடக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். முடக்க நடவடிக்கையை எந்த முறையில் எடுத்திருக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், நோட்டீஸ் வழங்காமல் எந்த செயல்முறையையும் பின்பற்றாமல் தளத்தை முடக்கியிருக்கிறார்கள். தகவல் தொடர்பு விதிகள் 2021ஐ பின்பற்றியிருக்க வேண்டும்."
"அதையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முடக்கம் செய்து 24 மணி நேரம் கழித்து தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடமிருந்து ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அடுத்த ஒரு நாளில் உங்கள் தரப்பு வாதத்தை எங்களிடம் முன்வைக்கலாம் எனவும் கூறியிருக்கிறார்கள். நியாயமே இல்லாத நடவடிக்கை இது. ஆனால், விகடனுக்கு இது ஒன்றும் புதிதில்லை. 1987 இல் என்னுடைய நண்பர் பாலச்சுப்பிரமணியனை அப்போதைய எம்.ஜி.ஆர் ஆட்சியில் இதேபோல விகடனில் வெளிவந்த கார்டூனுக்காக கைது செய்தார்கள். இத்தனைக்கும் அது வாசகர்கள் கொடுத்த ஐடியாவில் வெளியான கார்டூன். இரண்டு எம்.பி, எம்.எல்.ஏ க்களை திருடனாகவும் கொள்ளைக்காரனாகவும் சித்தரித்து அந்த கார்டூன் வரையப்பட்டிருக்கும். அதை பிரச்சனையாக்கி பாலசுப்பிரமணியத்தை கைது செய்தார்கள்.
என்.ராம்
அந்த விவகாரமும் தேசிய அளவில் பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் சுதாரித்துக் கொண்டு இரண்டே நாளில் பாலசுப்பிரமணித்தை விடுவித்து விட்டார். அந்த வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானது. 1994 இல் அந்த வழக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என குறிப்பிட்ட நீதிமன்றம் விகடனுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டது. அதன்படி 1000 ரூபாயை பாலசுப்பிரமணியன் நஷ்ட ஈடாக பெற்றார். அந்த 1000 ரூபாயை ப்ரேம் போட்டு இன்னும் விகடன் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள். அது காலத்துக்கும் மிக முக்கியமான மெசேஜை கடத்திக் கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையெல்லாம் கூட இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து ரிப்போர்ட் செய்திருந்தனர். இப்போது இவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை மோசமான முன்னுதாரணமாக மாறக்கூடும். ஒருவரை எனக்கு பிடிக்கவில்லையென்றால் டிஜிட்டலில் அவரை முழுமையாக முடக்க முடியும் என காட்டியிருக்கின்றனர். மேலும், இதில் மக்களின் தகவல் அறியும் உரிமையும் பாதிக்கப்படுகிறது. அடிப்படை கருத்துரிமைகளை உறுதிசெய்யும் அரசியலமைப்புச் சட்டம் 19(1)a க்கு எதிரானது. மேலும், 19(2) பிரிவின் படி நியாயமான காரணங்களுக்காக முடக்கங்களையும் கட்டுப்பாடுகளையும் அரசு விதிக்க முடியும். ஆனால், அதற்கும் ஒரு 8 காரணிகள் உண்டு. அதனடிப்படையில்தான் செய்ய முடியும். இவர்கள் அதையும் பின்பற்றவில்லை. இது அரசியலமைப்பை மீறிய செயல்."
"அண்ணாமலை புகார் கொடுத்தார் என்பதற்காக ஒரு ஊடகத்தை முடக்குகிறார்கள். பா.ஜ.க என்கிற கட்சியின் அபிலாஷைகளுக்கு அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?"
"அண்ணாமலை மட்டுமா? ஆளுநர் ஆர்.என்.ரவி கூட அப்படித்தானே இருக்கிறார். பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸூம் செய்ய வேண்டிய வேலைகளை அவர் செய்துகொண்டிருக்கிறார். கட்சிக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதென்றே தெரியவில்லை. Alice's Adventures in Wonderland நூலில் Queen of Hearts, 'Sentence First, Verdict Afterwards.' என்பார். முதலில் தண்டனையை கொடுத்துவிட்டு அதன்பிறகுதான் விசாரணையே நடத்துவார்கள். அதைத்தான் இப்போது மத்திய அரசும் செய்திருக்கிறது. இந்த விஷயத்தில் எனக்கு அந்த நூல்தான் நியாபகத்துக்கு வருகிறது."
இந்து என்.ராம்
"ஊடகங்களின் கருத்துச்சுதந்திரங்களில் தலையிடும் நிகழ்வு தொடர்ந்துகொண்டே இருக்கிறதே. இந்த போக்கு கவலையளிப்பதாக இருக்கிறதே!"
"1988 இல் ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் ஊழலை பற்றி பத்திரிகைகள் வெளிப்படையாக எழுதிக் கொண்டிருந்தன. அப்போது அவர்களை முடக்கும் வகையில் ராஜீவ் காந்தி சட்டத்திட்டங்களை வலுப்படுத்தினர். அந்த சமயத்தில் அத்தனை பத்திரிகையாளர்களும் தெருவில் இறங்கி போராடினார்கள். 2003 இல் ஜெயலலிதா ஆட்சியில் தி இந்துவை சேர்ந்த 5 சீனியர்களை கைது செய்ய முயன்றார்கள். நாங்கள் அவர்களிடம் சிக்கவில்லை. அப்போதும் இந்தியா முழுவதுமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
ஒரு பத்திரிகை பாதிக்கப்படும்போது போட்டி மனப்பான்மையையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எது நியாயம் எது அநியாயம் என்பதை அறிந்து அனைவரும் இறங்கி போராட வேண்டும். இந்த விவகாரத்தில் விகடனுக்கு எல்லா தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் அரசு தோற்கடிக்கப்படும் என்கிற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது."
அதிகாலையில் நல்ல சிந்தனையோடு ஒரு நாளைத் தொடக்குவது மிகவும் சிறப்பு. அந்த நோக்கத்தில் தொடங்கப்படுகிறது ஆஹா ஆன்மிகம் என்னும் புதிய பகுதி. இதில் தினமும் நம்மோடு அரிய தகவல்களை சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் பத்திரிகையாளை மை.பா. நாராயணன்.
திருச்சி, ஸ்ரீரங்கத்துக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“புது கேள்விகள் எல்லாம் கேட்டால் நான் எப்படி பதில் கூறுவது?, அந்தியூர் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி. அங்கு சில துரோகிகளால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை ஏற்கெனவே தெளிவுப்படுத்தி விட்டேன்.
பா.ஜ.க உடன் அ.தி.மு.க கூட்டணி வைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் பேசி இருப்பது குறித்து, ஓ.பி.எஸ்ஸிடம் தான் கேட்க வேண்டும். கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை. அமைதியாக அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது.
செங்கோட்டையன்
நீதிமன்ற வழக்கு தொடர்பாக சி.வி.சண்முகம் தான் பதில் கூறுவார். அவர் தான் எல்லா பதிலும் கூறுகிறார். நான் சாதாரண தொண்டன். என்னிடம் கேட்கும் கேள்விகளை பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க - பா.ஜ.க-வோடு கூட்டணி வைக்குமா என்பது குறித்தும் பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். விவசாயிகள் நடத்திய கூட்டத்தை நான் புறக்கணிக்கவில்லை. அதில் கலந்து கொள்ளவில்லை என்று தான் ஏற்கெனவே கூறினேன்” என்றார்.
திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பேட்மிட்டன் விளையாட்டு மைதானத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக, மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரை, சீனிவாசன் நாடியுள்ளார். அப்போது, சந்திரசேகர் சீனிவாசனிடம், ”மின் இணைப்பு கொடுப்பதற்காக எனக்கு ரூ.10,000 லஞ்சம் தர வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.
அலுவலர்
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அலுவலர்
லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஆலோசனைப்படி சீனிவாசன், சந்திரசேகரனிடம் ரூபாய் 10,000 -த்தை லஞ்சமாக கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட சந்திரசேகர் தன்னுடைய உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் அந்த பணத்தை கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இதனை அடுத்து அந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சந்திரசேகர் மற்றும் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திரைப்படங்கள் தொடர்பான பல அப்டேட்டுகள் நேற்று வந்திருந்தது!
போஸ்டர், டைட்டில் டீசர் என எஸ்.கே-வின் ரசிகர்களுக்கு நேற்றைய தினம் அதிரடி டிரீட்தான்! `அமரன்' படத்தின் வெளியீட்டுப் பிறகு அவரின் படங்களின் மீதான எதிர்பார்ப்பு பல மீட்டருக்கு எகிறியிருக்கிறது. `அமரன்' படத்தை தொடர்ந்து பல அதிரடியான லைன் அப்களையும் தன் கைவசம் வைத்திருக்கிறார் எஸ்.கே.
கடந்த 2014-ம் ஆண்டு `மான் கராத்தே' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதே என் கனவு எனக் கூறியிருந்தார் எஸ்.கே. அந்த கனவு தற்போது அவருக்கு கைகூடியிருக்கிறது. முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு `மதராஸி' என தலைப்பை வைத்து டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படம் சிவகார்த்திகேயனின் கரியர் கவுன்ட்டில் 23-வது திரைப்படம். மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் களமிறங்கியிருக்கிறார். இந்த `மதராஸி' திரைப்படம் இந்தாண்டில் வெளியாகிவிடும் என படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
Sk 25
ஒரு நடிகரின் கரியரில் அவர்களின் 25-வது படத்தை ஒரு மைல்ஸ்டோன் ப்ராஜெக்ட்டாகவே கருதுவார்கள். அப்படி யோசித்து சுதா கொங்கரா இயக்கும் `பராசக்தி' திரைப்படத்தை தன்னுடைய 25-வது படமாக தேர்தெடுத்திருக்கிறார் எஸ். கே. ப்ரீயட் கதையில் உருவாகும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாகவும், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, ஜி.வி. பிரகாஷுக்கும் இப்படம் ஒரு மைல்ஸ்டோன்தான். அவர் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இதுதான்.
இந்த இரண்டு திரைப்படங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படங்களின் விவரம். இதை தாண்டி `அமரன்' திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் `டான்' படத்தின் இயக்குநர் சி.பி.சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக அப்டேட் கொடுத்திருந்தார். அத்திரைப்படம் எஸ்.கே-வின் 24-வது படமாக உருவாகவிருந்தது. ஆனால், அதன் பிறகு அப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
SK in Madharasi
`கோட்' படத்தின் ரிலீஸ் சமயத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவிருப்பதாக கூறியிருந்தார். சமீபத்திய பேட்டியில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தியும், ``சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறோம்." எனக் கூறியிருந்தார். வெங்கட் பிரபு இயக்கும் படமும், ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் படமும் தனி தனி திரைப்படமா அல்லது ஒரே படமா? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரியவரும்.
இந்த லைன் அப்களையெல்லாம் தாண்டி `குட் நைட்' படத்தின் இயக்குநரான விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் எஸ்.கே ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
இதில் எந்த திரைப்படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்?
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://bit.ly/4gzKTsI
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...